நியூ சவுத் வேல்ஸ் விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட மாகாணங்களில் கேசினோ விளையாட்டுக்கள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற கேசினோ விளையாட்டுக்களின் போது பணப் பரிவர்த்தனைகளை முறைகேடு நடைபெற்றதாகவும், அப்போது கருப்பு பணத்தை முதலாக வைத்து பணச்சலவை செய்த்தாகவும் Perth Casino Royal Commission கூறியுள்ளது. மேலும் இது போன்ற பணம் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வகையில் அது பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதையும் கமிஷன் கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து மேற்கு ஆஸ்திரேலியா வுக்கான கேசினோ விளையாட்டு உரிமம் இந்த ஆண்டும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மூலமாகவும் சுற்றுலாத்துறை மூலமாகவும் மிகப்பெரும் நிதியை மாகாணத்தின் உடைய கருவூலத்திற்கு வழங்கிவரும் வகையில் கேசினோ விளையாட்டுக்கள் இருப்பதாக Perth Casino Royal Commission கூறியுள்ளது. இதனிடையே மேற்கு ஆஸ்திரேலியாவில் கேசினோ விளையாட்டை மையமாக கொண்டு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நட்சத்திர விடுதிகள், பார்கள் மற்றும் கேசினோ மையங்களில் பணியாற்றும் நபர்களின் தற்போதைய நிலை கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமிஷன் தரப்பில் இருந்து மேற்கு ஆஸ்திரேலிய மாகாண அரசுக்கு உரிய அறிக்கை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
கேசினோ விளையாட்டுக்கள் தொடர்பான விதிமுறைகளை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் Racing மற்றும் Gaming துறை அமைச்சர் Tony Buti கூறியுள்ளார்.
Perth Casino Royal Commission உப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்றும், அவர்கள் தன்னாட்சி அமைப்பாக தொடர்ந்து மாகாணங்களில் நடைபெறும் முறைகேடு சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/36EwAnk