Breaking News

சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பரிதாப பலி..!!

சிட்னியி நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை தொடர்ந்து, மக்களிடையே பழிவாங்கும் தாக்குதல்களைத் தடுக்க செயல்திறன் வாய்ந்த காவல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 women tragically killed in Sydney shooting

கடந்த 13-ம் தேதி சிட்னியின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ரிவெஸ்பை என்கிற பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒரு பெண்ணும் 39 வயதான மற்றொரு பெண்ணும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பரபரப்படைந்துள்ளது.

2 women tragically killed in Sydney shooting,வழக்கை விசாரித்து வரும் துப்பறியும் இலக்காவின் கண்காணிப்பாளர் டேனி டோஹெர்டி இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதில் இரண்டு பெண்களும் காருக்குள் இருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இறந்துபோன இருவரில் 48 வயதான பெண்ணை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் இப்பகுதியில் அறியப்பட்ட நபராக இருந்துள்ளார். அவருக்கு ஆகாத சிலர் தான், இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்துபோது, இறந்துபோன 2 பெண்களுடன் 16 வயதான சிறுமியும் 20 வயதான இளைஞரும் காருக்குள் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டின் போது அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறனர் என்று அதிகாரி டேனி டோஹெர்டி கூறினார்.