Breaking News

போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நபரின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது !

போலீசை குழப்பிய மர்ம நபர் … வித்யாசமாக நடந்துகொண்டதால் அதிரடி கைது !

விக்டோரியா போலீஸ் ஆபீஸர்களால் ஒரு நபர் நடுரோட்டில் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள போலீசார் மற்றும் அந்த நபர் இப்பொழுது விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சுமார் 4:10 மணி அளவில் நார்த் மெல்போர்னில் போலீசார் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்தபோது அவர் திடீரென தாறுமாறாக நடந்து கொண்டதாக, விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு நடந்து கொண்ட நபரின் செயல்களை பார்த்து அதிர்ந்து போன போலீசார் செய்வதறியாது சற்று கடினமாக நடந்து கொண்டதாகவும், மேலும் அவர் போலீசாரின் வாகனங்களை கண்டபடி சேதப்படுத்தியதாக விசாரணையின் போது போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் 32 வயது மதிக்கத்தக்க அந்த நபர் எந்த ஒரு முழுமையான விலாசமும் இல்லாமல் சுற்றித் திரிந்ததால், அவரை சந்தேகத்தின் பெயரில் மடக்கிப்பிடித்து கைது செய்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு வெளியான வீடியோவில் 6 போலீசார் சுற்றி வளைத்து நிற்க, அவர்களுக்கு நடுவே அந்த நபர் கீழே விழுந்து கிடக்கின்றார்.
அந்த வழியாக சென்ற ஒருவர் இந்த சம்பவங்களை வீடியோ காட்சியாக பதிவு செய்து உள்ளார் .
போலீசாரால் மடக்கிப் பிடித்து கீழே படுக்க வைக்கப்பட்ட அந்த நபர், “
உங்களுக்கு அவனுடைய தலை கிடைத்துவிட்டது, நம்ப முடியவில்லை” என அந்த போலீஸ் நபர்களை பார்த்து ஆக்ரோசமாக அந்த வீடியோ எடுத்த நபர் கூறியுள்ளார்.

இந்த அதிரடி கைது பற்றி விக்டோரியா போலீசார் தரப்பில் பேசிய பேச்சாளர் ஒருவர் மேலதிகாரிகளின் கட்டளையின்படியே இந்த கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்ட ரீதியாக சரியான முடிவே காவல் துறை எடுத்து உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு அசாதரணமாக நடந்த இந்த கைது வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளதை தொடர்ந்து அந்த ஆறு போலீசார் மற்றும் அந்த நபர் இப்பொழுது விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.