Breaking News

கான்பெர்ரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- முதியவர் கைது..!!

கான்பெர்ரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யபட்டுள்ள 63 வயது நபரின் மனநிலையை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Shooting at Canberra Airport- Elderly Man Arrested

கடந்த 14-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் கான்பெர்ரா விமானநிலையத்தின் உட்புறப்பகுதிக்குள் துபாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கியுடன் நின்றிருந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையின் 63 வயதான அலி ரச்சிர்டு அம்மவுன் என்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவம் நடந்த வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஒடுதளத்தில் இருந்த விமானங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

Shooting at Canberra Airport- Elderly Man Arrested.மீண்டும் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர மாலை 5 மணி வரை ஆனது. கைது செய்யப்பட்ட முதியவர் அலி ரச்சிர்டு அம்மவுன் ஆஸ்திரேலியாவின் கேப்பிட்டல் டெரிட்டரி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது துப்பாக்கிச் சுடுதல், கையில் கொலை ஆயுதம் வைத்திருந்தது மற்றும் தவறான நோக்கத்துடன் ஆயுதத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

 

அதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் கூக்குக்கு 3 நாட்கள் விசாரணைக் காவல் வழங்கினார். தொடர்ந்து அலெக்சாண்டர் மகோனோச்சி மையத்தில் அவருடைய மனநிலையை பரிசோதித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.