Breaking News

கடத்தப்பட்ட 4 குழந்தைகள் பத்திரமாக மீட்பு- குற்றவாளி தலைமறைவு..!!

குயின்ஸ்லாந்தில் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட 4 குழந்தைகளும் பத்திரமாக வீட்டுக்கு திரும்பியுள்ளதை அடுத்து, குழந்தைகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

4 Kidnapped Children Safely Rescued - Criminal Absconded.

வடக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள மெக்கே என்கிற பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், கடந்த 11-ம் தேதி திடீரென மாயமாகினர். உடனடியாக குழந்தைகளின் தாயார் காவல்துறையினர் புகார் அளித்தனர்.

4 Kidnapped Children Safely Rescued - Criminal Abscondedசம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த அதிகாரிகள், குழந்தைகள் ஜோஸ்வா கார்டர் என்கிற நபரால் கடத்தப்பட்டத்தை உறுதி செய்தனர். இதையடுத்து கடத்தப்பட்ட 3 சிறுமியினர் உட்பட ஒரு ஆண் குழந்தையை காவல்துறையினர் இன்று காலை 9.20 மணியளவில் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆய்வாளர் ரீகன் ட்ராஹைம், கடத்தப்பட்ட குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய மனநிலையை குறித்து அறிந்திட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குழந்தைகள் கடத்தப்பட்ட சூழல் குறித்து விசாரிக்கப்படவுள்ளது. ஜோஸ்வா கார்டர் என்கிற நபர் நிசான் காரை வைத்து குழந்தைகளை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது என்றார்.

4 Kidnapped Children Safely Rescued - Criminal Absconded,மேலும், உடல் முழுவதும் பச்சைக்குத்திக் கொண்டு தாடி மீசையுடன் காணப்படும் ஜோஸ்வா கார்டரின் புகைப்படங்கள் மெக்கேவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தேடப்பட்டு வரும் ஜோஸ்வா கார்டர் குறுத்தி தெரியவந்தால், 1800 333 000 என்கிற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தரலாம் என்று ஆய்வாளர் ரீகன் ட்ராஹைம் கூறினார்.