அப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனிம வளங்கள், நீர் மேலாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம், கொரோனா தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர்.
அதுதொடர்பாக கூட்டறிக்கையும் நடைபெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதற்காக மோரீசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். கொரோனா பரவல் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்களின் நலனில் அக்கறை செலுத்தியதற்கு மோரீசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, நட்புறவு மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.