Breaking News

மத்திய அரசு தனது சட்டவிரோத Robodebt திட்டத்தின் மூலம் ‘ஆஸ்திரேலிய வரலாற்றின் மிகப்பெரிய நடவடிக்கையை’ தீர்மானிக்கிறது !

மத்திய அரசின் சட்டவிரோத Robodebt திட்டத்திற்கு எதிரான வர்க்க நடவடிக்கை Federal Court விசாரணையின்முதல் நாளில் தீர்க்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட விசாரணைக்கு முன்னதாக அதன் சட்டவிரோத Robodebt திட்டம் தொடர்பாக நடவடிக்கையில் தீர்வு காண ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் Federal Court விசாரணை திங்களன்று தொடங்கவிருந்தது, ஆனால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், பெறுநர்களுக்கு எதிராகச் சட்டவிரோத தானியங்கி கடன்களை எழுப்பியதாகக் கண்டறியப்பட்ட திட்டத்தின் மீது கொள்கை ரீதியான தீர்வை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 720 Million dollar பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்பது தெரியவந்தது.

கடன்களை மீட்டெடுப்பதைத் தீர்மானிக்க ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் மற்றும் Centrelink தகவல்கள்மூலம் Robodebt அமைப்பு செயல்பட்டது. தானியங்கிக் கடன் மீட்பு செயல்முறை மூலம் அறிவிப்புகளைக் கடந்தஆண்டு பெறத் தொடங்கிய மக்கள் சார்பாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இத்திட்டம் சட்ட விரோதமானது என்று Federal Court கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் நடவடிக்கை தீர்வுக்கு ஒரு நீதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டால், சுமார் 400,000 மக்களுக்கு 1.2 Billion dollars அதிகமாக வழங்கப்படுமென்று law firm Gordon Legal Gordon கூறியுள்ளார்.

“ Robodebt – ஆல் இந்த வர்க்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இந்த நடவடிக்கைகளுக்குத்தலைமை தாங்கிய Katherine, Elyane, Steven, Felicity, Shannon மற்றும் Devon ஆகிய முன்னணி விண்ணப்பதாரர்களின் தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று Andrew Grech கூறியுள்ளார்.

“இரண்டு அரசாங்கங்கள் தொடர்பாக இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நாங்கள் சரி செய்கிறோம், அதைத்தான் அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத்தான் அரசாங்கம் செய்துள்ளது – அதைத்தான் அரசாங்கம் இனி தொடர்ந்து செய்யும்.” என்று Prime Minister Scott Morrison தெரிவித்துள்ளார்.

“இன்று, அரசாங்கத்தின் சட்டவிரோத பாதுகாப்பு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் 400,000 பேர், இந்தமக்களுக்குச் சிறிதளவாவது நீதி கிடைத்துள்ளது, இது அவர்களுக்கு ஒரு நல்ல நாள், ஆனால்ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் இந்த செயல்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘யார் பொறுப்பு?’.இந்த அரசாங்கத்தின் சட்டத்தைப் பின்பற்றுவதற்காக ஆஸ்திரேலிய வரலாற்றின் மிகப்பெரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை, மேலும் இது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதை நாங்கள் உறுதி செய்து கொல்ல வேண்டும்.” என்று Federal Labor frontbencher Bill Shorten கொந்தளித்தார்.

இத்திட்டம் சட்ட விரோதமானது எனக் கருதப்பட்ட பின்னர், இத்திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மக்களிடமே திருப்பி தருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தால் ஏற்பட்ட “கஷ்ட நஷ்டங்கள்” குறித்து பாராளுமன்றத்தில் Prime Minister Morrison மன்னிப்பு கேட்டுள்ளார்.

“அரசாங்கத்தின் தண்டனைக்குரியது Robodebt திட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார செலவுகளை கணக்கிடுவது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது. இதில் அரசாங்கத்திற்கு இவ்விஷயத்தில் எது தெரியும், எப்போதிருந்தது தெரியும் என்று தெரியவில்லை ஆனால் அதை மூடிமறைக்க அவர்கள் இன்னும் தீவிரமாக முயல்கின்றனர் .” என்று Greens Senator Rachel Siewert கூறியுள்ளார்