Breaking News

விக்டோரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு இல்லை !

$155 millionக்கு தேசிய நோய் தொற்று மையம் விக்டோரியாவில் நிறுவப்படும் என்று Premier Daniel Andrew உறுதிமொழி கொடுத்துள்ளார்.
கடந்த 14 நாட்களாக எந்தவித மரணமோ நோய் தொற்றோ யாரிடமும் தென்படவில்லை என்று மாநில பதிவுகள் கூறுகின்றன.

வெள்ளிக்கிழமை அன்று திரு Andrew $ 155 millions வரப்போகும் budgetஇல் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். Melbourne பல்கலைக்கழகம் Parkville-இல் ஆஸ்திரேலியா நோய் தொற்று நிறுவனம் நிறுவப்படும் என்று கூறியுள்ளார். $550 millions மையத்திற்கு தேவைப்படும் என்று கருதப்படுகிறது.

பல்கலைக்கழகம் மற்றும் பங்குதாரர்கள் $150 million தரப்போவதாகவும் மீதமுள்ள தொகையை Common Wealth-திடம் இருந்து பெறப்படும் என்று கூறியுள்ளார். பிப்ரவரி 22 முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. மாநில பதிவுகளில் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித நோய் தொற்றும் கண்டறியவில்லை.

வியாழனன்று கிட்டத்தட்ட 12,000 விக்டோரியர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த வார சோதனை மிகவும் திருப்திகரமாக உள்ளது என்று Andrews தெரிவித்தார்.

ஒரு நோய் தொற்று கூட கண்டறியப்படாமல் இருந்தாலும், இது நம்முடைய நோக்கம் அல்ல பரவாமல் தடுப்பதே நம்முடைய நோக்கம் ஆகும் அதற்குறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அடுத்த வருடம் புதிய நோய் தொற்று மைய கட்டுமானப்பணி தொடங்கி 2025யில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுமானப்பணியில் குறைந்தது 350 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும், 5000 பேருக்கு Biomedical sector ல், 850 பேருக்கு மையத்தில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரு Andrews கூறினார்.