Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு கொரோனா பாதிப்பு உறுதி !Adelaide’s Parafield cluster-ருடன் தொடர்பு !

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு கொரோனா பாதிப்பு உறுதி செய்ததை தொடர்ந்து, இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் குறித்த பயத்தை மக்களிடையே எழுப்பி உள்ளது.

இது குறித்து Chief Public Health Officer Nicola Spurrier கூறுகையில் ,இந்த தொற்று Parafield cluster-ருடன் தொடர்புடையது ,மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்த பிறகு ,சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது S.A வில் 38 கொரோனா வழக்குகள் உள்ளன, அவற்றில் 11 வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயலில் தொற்றுநோய்கள் உள்ள அனைவருமே 4000 க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளுடன் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
Professor Spurrier கூறுகையில் ,அறிகுறிகள் உள்ள அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைவரும் முடிந்தவரை முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ,பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

Premier Steven Marshall கூறுகையில் ,கண்டிப்பாக இந்த இரண்டாவது அலை கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் விடுபடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.