நியூ சவுத் வேல்ஸ் இன் லிவர்பூல் பப்பில் போதை மருந்து தடுப்பு சோதனைக்காக தலைமை காவலர் Mark Follington சென்றபோது அங்கு நடந்த சம்பவம் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது. அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் மார்க் 21 வயது Anya Bradford பெண்ணான அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார் அப்போது தன்னிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை என்று அவர் கூறவே அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலில் முடிந்தது. அப்போது அண்ணி யாவை தலைமை காவலர் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளார். அவரது கழுத்தை பிடித்து தலையை அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் இடித்துள்ளார்.
இதனிடையே அங்கிருந்து தப்பித்து Bigge Street ல் உள்ள Community Corrections அலுவலகம் செல்ல முயன்ற Anya வை உடன் வந்த மற்றொரு ஜூனியர் காவலர் விரட்டியுள்ளார். சாலையில் பெப்பர் ஸ்பேரேவை அடித்துவிட்டு தப்ப முயன்ற அவரை கைது செய்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யும் போது முட்டியால் Anyaவின் மார்பில் தலைமைக் காவலர் Follington அழுத்தியதால் அன்யா மூச்சுத்திணறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மீது புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்களை அளித்துள்ளார். வழக்கு விசாரணையின் போது மேஜிஸ்ட்ரேட் காவலர்களை கண்டித்தார். அப்போது அன்யா தங்களைத் தாக்க முயன்றதாகவும் அதனை தடுக்கவே தாக்குதல் நடத்தியதாகவும் Follington கூறினார். அதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
லிவர்பூல் பப் சிசிடிவி காட்சிகள் அனைத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது தெளிவாக பதிவாகி உள்ளதால் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் மற்றும் மற்றொரு காவலர் மீது நீதிமன்றத்தில் 6 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சட்டத்திற்குப் புறம்பாக காவலர்கள் இதுபோன்ற கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Anya வின் வழக்கறிஞர் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு மீது வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட Anya Bradford ஒரு திருநங்கை ஆவார்.
Link Source: https://ab.co/3fQbiUE