விக்டோரியா அரசு, வெள்ளிக்கிழமை இரவு முதல் தனது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருந்தபோது, புதிதாக இரண்டு புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுடன் சம்பந்தப்பட்டது. புது தொற்று எதுவும் ஏற்படவில்லை. இந்த இரண்டு தொற்றும் Holiday Inn ஹோட்டலில் ஏற்பட்ட தொற்றுடன் சம்பந்தப்பட்டது.
இது குறித்து ,மாநில முதல்வர் Daniel Andrews கூறுகையில், பொது சுகாதாரத்திற்கு எந்த பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டு பிற்பகுதியில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக கூறினார். மேலும் இப்பொழுது நாளொன்றுக்கு 30 பேர் வரை பிறருடைய வீட்டிற்கு செல்லலாம். 5 முதல் 100 பேர் பொது கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.
பொது வாகனம், taxi மற்றும் ride share வாகனங்கள் மற்றும் மிகவும் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மட்டும் முகக்கவசம் அணியலாம். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 75% ஊழியர்கள் பணியாற்றலாம்.
Holiday Inn cluster-ல் ஏற்பட்ட தொற்றினால் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய 14 நாள் தனிமைப்படுத்துதல் முடியும் நிலையில் உள்ளது.கடந்த சில வாரங்களாக வீட்டிலேயே இருந்து தங்களை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அவர்களால் தான் நாம் நம்முடைய இயல்புநிலைக்கு வந்துள்ளோம். அவர்கள் நமது எல்லோருடைய குடும்பத்தையும் பாதுகாக்க உழைத்துள்ளார்கள் என்றார்.