120க்கும் மேற்பட்ட Pfizer டோஸ் தடுப்பூசி மெல்போர்ன் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தேவையான அளவை விட இரு மடங்கிற்கும் அதிகமான தவறுதலாக செயல்படுத்திய பின்னர் அவை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஒரு குளிர்சாதன பெட்டியில் Pfizer தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸில் ஐந்து நாட்கள் வரை சேமிக்க முடியும். மேலும் அதனை பராமரிக்கப்பட்டாலும், வெப்பநிலை முழுவதும் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க முடியவில்லை.எனவே மீதமுள்ள vials-களை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ குழு முடிவெடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தன்னிடம் எந்த விவரமும் இல்லை என மாநில முதல்வர் Daniel Andrews கூறினார். மேலும் மத்திய சுகாதார அமைச்சர் Greg Hunt தான் இதை பற்றி பேசவேண்டிய நபர் என்று நான் நினைக்கிறேன், எனவும் கூறினார்.
மாநிலம் முழுவதும் முன்னணி தொழிலாளர்களுக்கு விக்டோரியா இதுவரை 3000 ஜாப்களை வழங்கியுள்ளது. பிரதமர் Scott Morrison Covid-19 தடுப்பூசி வெளியிடுவதில்,பிரச்சனைகள் எங்கு வந்தாலும் விரைவாக கையாளப்படும் எனவும் கூறினார்.
மெல்போன் பல்கலைக்கழகத்தின் Trinity கல்லூரியில் வசிக்கும் மாணவர்கள் தடுப்பூசி போடுவதற்கான உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்களில் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் இந்த விதி ஊழியர்களுக்கு பொருந்தாது.
பிரிஸ்பேனில் இரண்டு முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் தற்செயலாக Pfizer தடுப்பூசி அதிகமாக வழங்கப்பட்டது.சுமார் 23,000 ஆஸ்திரேலியர்கள் இதுவரை Pfizer ஜாப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.