தாஸ்மானியாவின் Launceston’s Seaport பகுதியில் கார் ஒன்றின் மீது மோதி நீல நிற இரு சக்கர வாகனம் ஒன்று விபத்திற்குள்ளனாதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து நடப்பதற்கு முன்னதாக சிட்டி சென்டர் பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்ததாகவும், விபத்து நடந்து இடத்தில் இருந்து 100 மீட்டர் முன்னதாக அவரது உடல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நடத்தப்படும் விசாரைணையில் உண்மைகள் தெரிய வரும் என்றும் தாஸ்மானியா காவல் ஆணையர் Stuart Wilkinson தெரிவித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட நபரை காவல்துறை பின்தொடர்ந்து சென்றதாகவும், விபத்து நடந்த உடன் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று காவல் ஆணையர் Stuart Wilkinson கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதில் 6 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக உரிய கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல் ஆணையர் கூறியுள்ளார்.