நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மத்திய மேற்கு பகுதியில் ஊரக தீயணைப்பு சேவை வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. Castlereagh Highway பகுதியில் காலை நேரத்தில் வந்த ட்ரக் ஒன்றின் மீது தீயணைப்பு துறை வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் அவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் கொண்டு விபத்துக்கான காரணங்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ட்ரக்- ல் பயணம் செய்த நபர்கள் காயம் அடைந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளை தருவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அவசரகால சேவை அமைப்பான CISS சம்பவ இடத்தில் முகாமிட்டு இருப்பதாகவும் தேவையான தகவல்களை பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் கார்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலமாக விபத்து குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அவர்கள் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அடுத்து Capertee இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்து இதர வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை மற்றும் போலீசார் இணைந்து மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Link Source: https://ab.co/3qYq8Or