Breaking News

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் படுகொலை- ஈரான் இளைஞர் கைது..!!

குடியேற்ற தடுப்பு மையத்தில் நடந்த வன்முறை மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, 29 இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Turkish youth murdered - Iranian youth arrested

பெர்த் மாநிலத்தின் நார்தம் மாவட்டத்தில் யோனாஹா ஹில் என்கிற குடியேற்ற தடுப்பு மையம் அமைந்துள்ளது. கடந்த வியாழன்று அங்கு தங்கியிருந்தவர்களிடையே மோதல் வெடித்தது. அதையடுத்து கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் துருக்கி நாட்டைச் சேர்ந்த 32 வயது நபர் கொல்லப்பட்டார். தகவலறிந்து வந்த நார்தம் மாவட்ட காவல்துறையினர், இறந்துபோனவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து, தீயை அணைத்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், துருக்கி நாட்டைச் சேர்ந்தவரை கொலை செய்த குற்றத்துக்காக, அதே குடியேற்ற தடுப்பு மையத்தில் தங்கி இருந்த ஈரான் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட நீதிபதியின் அனுமதி பெற்று, அந்த நபரை போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.