மேற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 56 சதவீத மக்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த நினைக்கும் மாகாண அரசு டிசம்பருக்குள் அனைவருக்கும் 2 தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக மாநில எல்லைகளில் தளர்வுகள் வழங்கப்படாது என்றும் அந்த மாகாண பிரீமியர் மெக்கோவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அந்த ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் டாலர் வரைக்கும் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 மில்லியன் தொழிலாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். அத்தியாவசிய பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி என்ற உத்தரவை நியூ சவுத் வேல்ஸ் மாகாணமும் குயின்ஸ்லாந்து ஏற்கனவே பிறப்பித்த இருந்தாலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கும் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை .
மக்களின் பாதுகாப்புக்காக வே இந்த கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளதாக பிரிமீயர் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு லட்சம் டாலர் வரைக்கும் அபராதம் என்ற உத்தரவு தங்களை மிகுந்த அச்சத்துக்குள்ளாக்குவதாகவும, குறிப்பாக தங்களுடைய ஊழியர்களின் தனிப்பட்ட மருத்துவ விவரங்களில் தலையிட பெரும்பாலும் விரும்புவதில்லை என்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியை சந்திக்க கூடிய தாங்கள் கட்டாய தடுப்பூசி என்ற உத்தரவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தங்களுடைய ஊழியர்களில் ஒருசிலர் தடுப்புச் எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் கூறுகின்றனர் .
மேற்கு ஆஸ்திரேலிய அரசின் முடிவு நீதிமன்றம் வரைக்கும் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே கட்டாய தடுப்பூசி என்ற உத்தரவை எதிர்த்து வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
Link Source: https://ab.co/3psxIlk