ஆஸ்திரேலியாவில் கோடைக்காலத்தை முன்னிட்டு பயிரிட்ட நெலமணிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதை உலகளவில் ஏற்றுமதி செய்து விற்பனை செய்வதற்கு கடினமான சூழல் நிலவுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற பிரச்னை நிலவி வருவதால், மீண்டும் பயிரிடுவதில் விவசாயிகளிடையே தயக்கம் காட்டுகின்றனர். ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற பிரச்னை நிலவி வருவதால் உலகளவில் உணவு பஞ்சம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா சபையில் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலில், உலகளவில் கோதுமை மற்றும் சோளத்தை பயிரிடுவதில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இருநாடுகளுக்கிடையே பிரச்னை நிலவி வருவதால் பொருட்கள் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.