மெல்பேர்னின் வடக்குப் பகுதியில் 61 வயதான கோபர்க் பகுதியைச் சேர்ந்தவரும் 59 வயதான பர்ன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்தவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக பர்ன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஆகஸ்டு 29-ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. எனினும் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் உரிய விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளனர்.