ஒங்வொரு ஆண்டும் மருத்துவம் , இயற்பியல், வேதியல், பொருளாதாரம் , அமைதி , இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது . அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிற துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது .
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கும் இந்த பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்காகவும், ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கும் இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரிவ் நோபல் பரிசு வென்றுள்ளதற்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிமிட்ரிவ் மிகவும் நேர்மனானவர் மற்றும் துணிச்சலானவர் என்று கிரெம்லின் பாராட்டு தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3FCDQNa