கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி ஸ்வான்ஸ் மற்றும் ஜீலாங்க் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சிட்னி ஸ்வான்ஸ் அணியை சேர்ந்த பிரபல வீரர் லான்ஸ் ஃபிராங்கிளின் ஆயிரமாவது கோலை அடித்தார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், லான்ஸ் ஆயிரமாவது கோலை அடித்தவுடன் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்த ரசிகர்கள் ஓடிவந்து லான்ஸை சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர் ஆயிரமாவது கோலை அடித்த பந்து திருடுபோனது. இதனால் ரசிகர்களுக்கும் போட்டி நடத்தும் அணி உரிமையாளர்களுக்கும் இடையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பந்தை திருடிச் சென்ற அலெக்ஸ் என்பவர், அதே மைதானத்தில் வைத்து ஃபிராங்கிளினிடம் பந்தை ஒப்படைத்துள்ளார்.
அவருடைய இந்த நல்ல செயலை பாராட்டி, சிட்டி கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் போட்டிகளை காண 5 ஆண்டு மெம்பர்ஷிப்பை ஒதுக்கியுள்ளது. இந்தாண்டில் நேர்மைக்கு கிடைத்த முதல் பரிசாக கருதுவதாக அலெக்ஸ் வீலர் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/36RP17V