இதுதொடர்பாக குயின்ஸ்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மாநில பொதுத்துறை ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஒருமைப்பாடு ஆணையர் நிக்கோலா ஸ்டெபாநோவ் முன்வைத்தார். இதையடுத்து அவரை பொருளாதாரம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு மாற்ற குயின்லாந்து முதல்வர் அன்னஸ்டாசியா பலாஸ்சுக் பரிந்துரைத்தார்.
இது மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்துக் கூறிய முதல்வர் அன்னஸ்டாசியா, நிக்கோலா ஸ்டெபாநோவ் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் கூற முடியாது. இந்த விவகாரத்தில் ஒரு முதல்வராக என்னுடைய கடமையை நான் சரிவர செய்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு பரிசீலனைக்காக நான் பரிந்துரைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/34C7NPO