கடந்த 1995-ம் ஆண்டு இளவரசர் சார்லஸை விட்டு டயானா பிரிந்துவிட்ட பிறகு, பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒரு நேர்காணல் வழங்கினார். உலகளவில் கவனமீர்த்த இந்த நேர்காணலை மார்டின் பஷீர் என்பவர் எடுத்தார்.
இதற்காக டயானாவின் தனிச் செயலாளர் பேட்ரிக் ஜெப்சனுக்கு அவர் நெருக்கடி கொடுத்துள்ளார். இதையடுத்து தனிச் செயலாளருக்கு பி.பி.சி நிறுவனம் குறிப்பிட்ட தொகையை கையூட்டாக வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து தான் அந்த நேர்காணல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான செய்தி அனைத்தும் டைசன் ரிப்போர்ட் என்கிற பத்திரிக்கையில் அப்போது வெளியானது. கடந்தாண்டு, டயானாவை நேர்காணல் செய்ய அவருடைய தனிச் செயலாளர் பேட்ரிக் ஜெப்சனுக்கு பி.பி.சி நிறுவனம் நிர்பந்தம் செய்து கையூட்டு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து டயானாவை நேர்காணல் செய்த மார்டின் பஷீர் பணியில் இருந்து விலகினார். தன்னுடைய செயலுக்கு பேட்ரிக் ஜெப்சனிடம் பி.பி.சி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
Link Source: https://ab.co/3InK9V2