ஆஸ்திரேலியாவின் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத இந்த மழையால், அந்நாட்டின் மேற்குப் பகுதிகள் சில வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாகாணம் ஒட்டுமொத்த நாட்டுடனும் தொடர்பை துண்டிக்கும் அளவுக்கு தனித்தீவாக மாறியது.
இதனால் இயற்கை பேரிடர்களால் விநியோகச் சங்கிலிகளில் இடையூறு உருவாகியுள்ளது. போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், வெளிமாநில சாலைகளை மேம்படுத்தவும் ஆஸ்திரேலிய அரசு பல மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்த டனாமி சாலை கட்டமைப்பு திட்டத்தை மீண்டும் மத்திய அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. ஹால்ஸ் க்ரீன் முதல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா எல்லை வரையும் மற்றும் அதை தொடர்ந்து வெளியூர் நெடுஞ்சாலையாகவும் இந்த சாலை திட்டம் கட்டமைக்கப்படுகிறது.
ஹால்ஸ் க்ரீன் முதல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா எல்லை வரை கட்டமைக்க 400 மில்லியன் டாலர் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிப்புற நெடுஞ்சாலைக்கு 676 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது நிபந்தனைக்குட்பட்டதாகவும் மற்றும் பணம், பொது நலனுக்கான மதிப்பை நிரூபிக்கும் வணிக வழக்குகளை சார்ந்துள்ளது.
Link Source: https://ab.co/37aKrBG