கடந்த 2016-ம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டில் நாவல் குரூப் என்கிற நிறுவனத்துடன் இணைந்து நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. அதை தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகள் 12 மாதங்களில் ஐக்கிய ஒன்றியம், அமெரிக்காவுடனான கூட்டு முயற்சியில் அணுசக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை வாங்க திட்டமிட்டு கொடுத்தது.
இதையடுத்து ஃபிரெஞ்சு நாட்டுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துகொண்டது. இதனால் அதிகளவிலான செலவீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் வரி செலுத்துவோர் கூடுதலாக 5.5 பில்லியன் டாலர் வரை வரி செலுத்த நேரிடும் என்று தொழில்துறையைச் சேர்ந்த பென்னி வாங் கூறியுள்ளார். அதேபோல ஆஸ்திரேலியா அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண்ட 1.3 பில்லியன் மதிப்பிலான ஆயுதம் தாங்கிய ட்ரோன் தயாரிப்பு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இதை பாதுகாப்பு துறை செயலர் மாட் யன்னோபோலஸும் உறுதி செய்துள்ளார். இதனால் மத்திய அரசு மீது ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
Link Source: https://ab.co/3Dw0k1T