ரஷ்யாவின் படையெடுப்பில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியான மரியூபோல் கடும் சேதங்களுக்கு உள்ளாகி வருகிறது. அங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை. எனினும், இந்த தாக்குதல்ல் சிக்கி படுகாயமடைந்தோரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதைபதைக்கச் செய்பவையாக உள்ளன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வலோடைமைர் ஜெலன்ஸ்க்கி, ஒரு குழந்தை உட்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை உறுதி செய்து உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் ட்வீட் செய்துள்ளார்.
Link Source: https://ab.co/3KDtajo