ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறி ஆஸ்திரேலியா அரசு பொய்யான புள்ளிவிவரங்களை தெரிவித்து வருவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கேன்பிரா பகுதியில் கொரோனா தடுப்பூசி எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விமான நிலையங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதும், போக்குவரத்து இடங்களில் பதாகைகளுடன் நிற்பதுமாக போராட்டக்காரர்கள் கொரோனா தடுப்பூசி எதிரான தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் முகக்கவசமும் அணிவது கிடையாது என்பது மேலும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியன் கேபிட்டல் டெரிட்டரி மாகாண முதல்வர் ஆண்ட்ரூ பார், போராட்டக்காரர்கள் நண்பர்களை விட எதிர்களை தான் அதிகம் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக செயல்படும் பட்சத்தில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3uxDt3u