Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு : தோள் மற்றும் காலில் இரண்டு குண்டு பாய்ந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அடிலைட் நகரத்தின் நியூட்டன் பகுதியில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக வடகிழக்கு பகுதியான நியூட்டனுக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

Liascos Avenue பகுதியில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு இறந்த நபர் ஒருவருக்கு தோள் மற்றும் காலில் குண்டு பாய்ந்து இருப்பதாகவும் அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாராமெடிக்கல் மற்றும் ரோந்து வாகனங்களுடன் அங்கு போலீசார் சென்ற நிலையில் பாராமெடிக்கல் வாகனத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ராயல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Shooting in Adelaide, South Australia. Man admitted to hospital with two gunshot wounds to the shoulder and leg.காவல் துறை சம்பந்தப்பட்ட குற்றம் நடந்த இடத்திற்கு வருவதற்குள்ளாகவே சந்தேகிக்கப்படும் வகையில் அங்கு இருந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நியூட்டன் பகுதிக்கு ஸ்டார் குரூப் அலுவலர்கள் என்று சொல்லப்படும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்த நிலையில் குற்ற சம்பவம் குறித்த பல்வேறு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் உடல்நிலை சீரடைந்த பின்னர் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/33p44ET