ஆஸ்திரேலியாவில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவால் முதியோர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது கவலையை அளிப்பதாக உள்ளது. இதுதொடர்பா கொரோனா விசாரணைக் குழு கலந்தாலோசனை செய்ய முடிவு எடுத்தது.
இதில் கலந்துகொள்ள முடியாது என்று மத்திய முதியோர் பராமரிப்பு சேவைகள் அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடந்த அதேநாளில் அவர் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், தேசியளவில் கொரோனா தடுப்பூசிக்கான பணிக்குழு குறித்து கேட்டறிந்ததாகவும், பேச்சுவார்த்தை நடந்த நாளில் தொடர்ந்து கொரோனா பரவல் தொடர்பான சந்திப்புகளில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பல்வேறு அரசியல் தலைவர்கள் அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் கொரோனா தொடர்பாக பேசுவதற்கு விரும்பவது கிடையாது என்று தெரிவித்துள்ளனர். முதியோர் வாழ்க்கை குறித்த எந்தவிதமான அச்சமும் இல்லாமல், அமைச்சர் திமிருடன் நடந்துகொண்டது கவலை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Link Source: https://bit.ly/3H1MAwK