சாலையில் கத்திகுத்தி காயங்களுடன் நபர் உயிருக்கு போராடுவது குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் சிலர் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கும் அவர்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்கிற பாணியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.