ஆஸ்திரேலியன் ரக்ஃபி தொடருக்கு ஏற்றுவாறு ஊரகப் பகுதியிலுள்ள விளையாட்டு அரங்கு மேம்படுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு, ஆஸ்திரேலியா ரக்ஃபி ஆணையத்தின் தலைவர் பீட்டர் வேலேண்ட்ஸுக்கு வாக்கு கொடுத்திருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி விளையாட்டு அரங்கங்கள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பீட்டர் வேலேண்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் பிரபல ரக்ஃபி தொடரை கியூன்ஸ்லேண்டு மாகாணத்தில் நடத்தபோவதாக அறிவித்தார். அவருடைய அறிவிப்பால் கோபமடைந்த நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் டாமினிக் பெர்ரோட், ஆஸ்திரேலியா ரக்ஃபி தொடர் பாரம்பரிய வழக்கப்படி சிட்னியில் தான் நடத்தப்படும். வேறு எங்கும் நடத்தப்படமாட்டாது என்று அறிவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரக்ஃபி ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியா ரக்ஃபி தொடரின் இறுதிச் சுற்று சிட்னியில் நடைபெறும் என தலைவர் பீட்டர் வேலேண்ட்ஸ் கூறியுள்ளார்.