விக்டோரியாவில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரசின் பொதுத்துறை ஊழியர்களான காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவம், செவிலியர், அவசர ஊர்தி ஓட்டுனர்கள், நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்களோ அதற்கான விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் ஏற்படும் பின் விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ விடுப்பையும் இந்த விடுப்பிலேயே சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இது தேவைப்படும் நடவடிக்கைதான் என்றும் அதே நேரத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை மிக வேகமாக துரிதப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விக்டோரியாவில் இதுவரை 2.1 மில்லியன் பெயர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்த படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3j8O3rN