புதியதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ஜனவரி பிறகு நாளொன்றுக்கு 25 ஆயிரம் வரை அதிகரிகக்கூடும் என அமைச்சர் பிராட் ஹசார்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை 1,360 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நோய் பரவல் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுத் துறை அமைச்சர் பிராட் ஹசார்ட் ஆராய்ந்தார். அப்போது பேசிய அவர், இதே பரவல் வேகம் நீடித்தால் ஜனவரி இறுதிக்கு பிறகு, நாளொன்றுக்கு 25,000 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த செப்டமர் 11-ம் தேதி தொடங்கி மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. மாநிலத்திலுள்ள நியூகாஸிட்ல் பகுதி கொரோனா பரவல் மையமாக வரையறுக்கப்படுகிறது. அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் விடுதியில் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது கூறினார்.
தற்போதைய உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸை கண்டு அச்சப்பட வேண்டாம். முந்தைய வேரியண்டுகள் போல இது பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இல்லை. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கப்பெற்ற தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஒமைக்ரான் வகை கொரோனாவின் பாதிப்பு குறைவு. இது நமக்கு ஆறுதல் தரக்கூடிய செய்தி என்றார் அமைச்சர் பிராட் ஹசார்ட்.
Link Source: https://ab.co/3mei0rn