தொடரும் சர்ச்சையாக நீடித்துக்கொண்டு இருக்கின்றது Brittany Higgins-இன் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு.இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்து லீகல் ஆக்ஷன் எடுக்கப்போவதாகவும் Brittany Higgins தெரிவித்து இருந்தார் .
இந்த சர்ச்சை குறித்து Morrison கூறுகையில், பாராளுமன்றத்திலும், நாங்கள் பணிபுரியும் இடங்களிலும் எங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். மேலும் Higgins-ன் புகார்கள் தொடர்பான போலீஸ் விசாரணையை வரவேற்கிறேன் அதன்பின் அவரது அலுவலகமும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்தவுடன் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese இந்த பிரச்சனை குறித்து கூறுகையில் ,இந்தப் புதிய அறிக்கைகளை அதிர்ச்சியூட்டும் மற்றும் துன்பகரமான ஒன்று என்றும் கூறினார். மேலும் Brittany Higgins-ஐ பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு என்ன நடந்தது என்பதை மிக அசாதாரணமாக காட்டியுள்ளார், என்று அவர் கூறினார்.
இந்த பாலியல் வன்கொடுமை பற்றி Morrison அறிந்திருக்க முடியாது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என Anthony Albanese கூறினார். மேலும் அவர் இங்கு எங்களுக்கு நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தான் தேவை எனவும் கூறினார்.
Morrison மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சனைக்கு ஆதரவு அளிக்க தவறியதாக இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில்,Higgins குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிரதமரின் தற்போதைய மூத்த பணியாளர் மற்றும் என்னுடைய முன்னாள் தலைமைத் தளபதி அன்று மாலை நடந்த சிசிடிவி காட்சிகளை எனக்கு காட்டுவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார், அதன்பின் தொடர்ந்து வற்புறுத்தினால் என்னுடைய தற்போதைய வேலை பாதிக்கப்படும் என எனக்குத் தோன்றியது, எனவும் கூறினார்.
குற்றச்சாட்டுகளை தனது அலுவலகம் கையாண்டது குறித்து உள் மதிப்பாய்வை தெரியப்படுத்துமாறு Albanese பிரதமரிடம் கேட்டார். மேலும் பிரதமர் அவ்வாறு செய்யாவிட்டால் அது ஒரு முழுமையான கேலிக்கூத்து என்று பிரதமரை விமர்சித்துள்ளார்.