Breaking News

மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதில் என்னை யாரும் திசை திருப்ப முடியாது – பிரதமர்

ஆஸ்திரேலிய மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதில் தன்னை யாரும் திசை திருப்ப முடியாது என்ற பிரதமர் Scott Morrison கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், தொற்று நோய் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பண மதிப்பு வாழ்வதற்கு போதுமான இல்லை என்று பல நல அமைப்புகள் வணிக குழுக்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

அதனால் வேலை தேடும் 1.2 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு (JobSeeker) ஒரு நாளைக்கு 3.57 டாலர் அல்லது இரண்டு வாரத்திற்கு 50 டாலரும், கொரோனாவிற்கு பின் 150 டாலர் வழங்கப்படும். மாநில அளவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை .இதனால் அவர்களுக்கு வழங்கும் ஊதியம் 9 மில்லியன் டாலர் செலவாகும்.

ஆஸ்திரேலிய சமூக சேவை கவுன்சிலின் தலைமை நிர்வாகி Cassandra Goldie வேலை தேடுபவர்கள் வாடகை, உணவு, மருந்து வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாமல் கொரோனா சப்ளிமெண்ட் 1போதாமல் மிகவும் போராடுகிறார்கள். இந்த மோசமான நிலைமையில் மக்களை ஏழ்மையில் விட முடியாது. இது மனிதாபிமானமற்றது என்பது பொருளாதார முன்னேற்றமும் இல்லை என்றார்.

நீண்ட காலமாக எங்களின் வேலையில்லா கட்டணம் OECD மிக குறைவாக உள்ளது. இது மிருகத்தனமானது மற்றும் மனிதாபிமானமற்றதாகும்.

வேலை வாய்ப்புத்துறைஅமைச்சர் Michaelia Cash கூறுகையில், வேலை தேடுபவர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்கள் குறுகிய படிப்பு அல்லது பணி அனுபவத்தை செய்ய வேண்டியிருக்கும். யாரேனும் வேலைக்கு விண்ணப்பத்திருந்து அவர்கள் தகுதியானவர்களாக இருக்கும்பட்சத்தில் வேலை வழங்கப்படும். அதை அவர்கள் வேண்டாம் என்று கூறினால் அந்த முதலாளி, அந்த நபர் வேலையை ஏற்க தவறியதாக புகார் அளிக்க முதலாளி அறிக்கை வரி அமைக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ஏன் அவர் பணி வேண்டாம் என்று கூறினார் என்பதற்கான காரணத்தை Jobactive கண்டறிய முடியும். அவர்களுக்கு சரியான காரணம் இல்லையென்றால் அவர்கள் மீறப்பட்டதாக கூறப்படும். மார்ச் 31ஆம் தேதி முதல் பணம் பெறுபவர்கள் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என்றார்.

anne ruston about jobs australiaசமூக சேவை அமைச்சர் Anne Ruston கூறுகையில், இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குகிறது. மக்கள் வேலை தேடும்பொழுது, அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். நாங்கள் சலுகைகளை உருவாக்கினால், அவர்கள் வேலை தேடி விரும்புவார்கள். எங்களுக்கு நியாயமான மற்றும் நிலையான அமைப்பு தேவையான மக்களுக்கும், அதற்கு வரி செலுத்துபவருக்கும் வேண்டும் என்றார்.