விக்டோரியாவின் பயண வவுச்சர் திட்டம் நாளை மீண்டும் வருகிறது, மேலும் முதல் முறையாக மெல்போர்ன் பெருநகரத்திற்கான கூப்பன்கள் வழங்கப்படும். நாளை காலை 10 மணி முதல் மெல்போன் பயண வவுச்சர் திட்டத்திற்காக 40,000 வவுச்சர்கள் கொடுக்கப்படும்.
விக்டோரியார்கள் தள்ளுபடியை பெற நகரத்தில் தங்குமிடம், இடங்கள் மற்றும் சுற்றுப் பயணங்களுக்கு பணம் செலவழித்த பின்னர் $200 தள்ளுபடியை பெற பதிவு செய்ய முடியும். வவுச்சருக்கு தகுதி பெறுவதற்கு, மக்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், விக்டோரியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
மெல்போர்ன் நகரத்தில் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குறைந்தபட்சம் இரண்டு இரவுகான , தங்குமிடம், இடங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு குறைந்தபட்சம் 400 டாலர் வரை செலவழித்திருக்க வேண்டும். மார்ச் 19 முதல் மே 16 வரை வவுச்சர்களுக்கான பயண காலம் செயல்படும்.
இத்திட்டத்திற்கு பெரிய வரவேற்பு மற்றும் புகழ் கிடைத்ததைத் தொடர்ந்து பயண வவுச்சர் திட்டம் மெல்போனுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக Acting Premier James Merlino தெரிவித்தார். மேலும் இது நம்ப முடியாத அளவுக்கு பிரபலமாக உள்ளது. விக்டோரியா முழுவதும் எங்கள் வணிகங்கள் மற்றும் சமூகங்களுடன் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது 40,000 வவுச்சர்களைக் கொண்டு மெல்போனுக்கு இதை பின்பற்றுகிறோம், எனவும் கூறினார்.
இந்த வவுச்சர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. நாங்கள் மக்கள் தங்கள் பணத்தை செலவு செய்யவும், நேரத்தை செலவிடவும், விக்டோரியாவை ஆராயவும் ஊக்குவிக்கிறோம்.பயண வவுச்சர்களின் மூன்றாவது சுற்று 50,000 மாக உயர்ந்துள்ளது. மேலும் மார்ச் 30ஆம் தேதி மாத இறுதியில் திறக்கப்படும்.கடைசி சுற்றில், விக்டோரியாவின் இணையதளத்தின் நேரலையில் 20 நிமிடங்களுக்குள் வவுச்சர்கள் தீர்ந்துவிட்டது. வவுச்சர்கள் ஒரு வீட்டுக்கு ஒன்று மட்டுமே அதனை விரைவாக பெற மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.