காலை 9 மணியளவில் Preston-ல் உள்ள High Street-ல் Preston ஹோட்டலுக்கு அடுத்ததாக உள்ள Makedonia பர்னிச்சரின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். கடும் கருப்பு புகை மற்றும் தீப்பிழம்புகள் பற்றி ட்ரிபிள் ஜீரோவுக்கு அழைப்புகள் வந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆறு நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் இடத்திற்கு வந்தனர் .மேலும் அக்கட்டிடத்திற்கு பின்புறம் முற்றிலுமாக தீப்பிளம்பு பரவி இருந்ததை பார்த்து அணைக்க முற்பட்டனர். இருந்தாலும் தீ வேறு இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது. அதன்பின் காலை 10:30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர், மூச்சுத்திணறல் கருவிகளை அணிந்து கொண்டு, அருகில் இருக்கும் பப் முழுவதும் தீ பரவாமல் தடுத்தனர்.
தொழிற்சாலையில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களும், பக்கத்து கட்டிடங்களை சேர்ந்தவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என உதவி தலைமை தீயணைப்பு அதிகாரி Darren Conlin கூறினார். மேலும் அதன் அருகே பப் மற்றும் சிகையலங்கார நிபுணர் இருந்தார். அந்த வளாகங்கள் இரண்டும் வெளியேற்றப்பட்டன எனவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து , Conlin கூறுகையில், தீயணைப்பு வீரர்களால் பர்னிச்சர் தொழிற்சாலைக்குள் தீயை கட்டுப்படுத்த முடிந்தது, பக்கத்து கட்டிடங்களுக்கு குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட்டது, என கூறினார்.ஆம்புலன்ஸ் விக்டோரியா மற்றும் விக்டோரியா போலீசார் சம்பவ இடத்தில் தான் உள்ளனர் .நாள் முழுவதும் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே இருப்பார்கள்.
விக்டோரியாவின் தீயணைப்பு மீட்பு துறை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு ஆலோசனை செய்தி வழங்கியது, வீடுகள் அல்லது வணிகங்களுக்கு புகை வருவதை தடுக்க அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட வேண்டும் என கூறினர் .தற்போது வரை சமூகத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை ஆனால் மக்கள் தொடர்ந்து தகவல் அறிந்து நிலைமைகளை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டது.