அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஜூலியன் அசாஞ்சேவுக்கு உரிமை உள்ளதாக லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை தாங்களே வழங்கவில்லை என தெரிவித்த லண்டன் உயர் நீதிமன்றம், ஆனால், ஜூலியன் அசாஞ்சேவுக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. இந்த வழக்கை எடுக்கலாமா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவில் அரசு கணினிகளை ஹேக் செய்து அதன் மூலம் தகவல்களை திருடி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட அவர் லண்டனில் தஞ்சம் அடைந்தார். மேலும் அவரது விக்கிலீக்ஸ் இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தை அமெரிக்கா நாடியது. 50 வயதான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டால் அவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது அதே நேரத்தில் அமெரிக்காவின் கோரிக்கையையும் நிராகரித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அமெரிக்கா நாடியது. ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதித்தால் அமெரிக்கா வழங்கும் தண்டனையை அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே அனுபவிக்கலாம் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாஷிங்டன் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். ஜூலியன் அசாஞ்சே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான மருத்துவ ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ள தீர்ப்பில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டால் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வார் என்ற கூற்றை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
இலையில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பிரிட்டன் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஜூலியன் அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://bit.ly/3IF7FNP