கொரோனா பரவலின் போது மாநிலத்தில் சுகாதாரத்துறையில் இருக்கும் அவலங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்காரணமாக சுகாதார துறைக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிட 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி அமைச்சர் டிம் பல்லாஸ் ஒதுக்கியுள்ளார்.
மேலும், கொரோனா காலக்கட்டத்தில் அவசர ஊர்தி வசதிகள் கிடைக்காமல் பலரும் துன்பப்பட நேர்ந்தது. அதை போக்கும் விதமாக அவசர சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு ஆணையத்தில் புதியதாக 400 மருத்துவ பணியாளர்களை நியமித்திட 333 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர உயிர் காக்கும் கருவிகளை வாங்கிட 4.2 பில்லியன் டாலரும், விரைவு உமிழ்நீர் ஆய்வி கருவிகளை வாங்கிட 1.1 பில்லியல் டாலரும், பாதிக்கப்பட்டவருக்கு வீட்டுகே வந்து மருத்துவம் பார்க்கும் வசதிக்காக 698 மில்லியன் டாலரும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்காக 284 மில்லியன் டாலரும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பள்ளிகளில் 1900 புதிய ஆசிரியர்களை நியமிக்க 779 மில்லியன் அமெரிக்க டாலர்கள், சிறார் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்த 131 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு ரயில் வழிதடங்கள், லெவல் கிராஸிங் பயன்பாடு உள்ளிட்ட போக்குவரத்து தேவைக்காக பட்ஜெட்டில் 338 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.