சீனாவின் இரண்டாவது பெரியநகரமாக இருப்பது பீஜிங். இங்குள்ள மக்களுக்கு இரண்டாம் முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் ஷாங்காயில் இருப்பது போன்று கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை.
பீஜிங்கி பல்பொருள் அங்காடி கடைகளில் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. அதேசமயத்தில் உள்ளூர் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். எனினும், மக்கள் மத்தியில் கொரோனா பீதி அதிகம் காணப்படுகிறது. வயதானவர்கள் வெளியே வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் தேவைகள் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. இதனால் பீஜிங்கில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.