ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான நூரிஸ்தானில் உள்ள காம்தேஷ் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளத்தாக்கு போன்ற தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. நூரிஸ்தான் மாகாணத்தின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால் அங்கு மீட்பு நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதி செய்துள்ள தலிபான் அமைப்பு அரசு விதிக்கும் பல்வேறு புதிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து ஏராளமானோர் காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான எவ்வித வசதியும் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனிடையே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் நிச்சயம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கக்கூடும் என்று தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் Zaibullah Mujahid கூறியுள்ளார்.
காணாமல் போன கிராமத்தினரை தேடும் பணியில் தாலிபான்கள் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டூரிஸ்ட் தான் போன்ற தனித்துவிடப்பட்ட வடமேற்கு மாகாணங்களில் உடனடியாக அவசர உதவிகளை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு களிலும் இதே நிலை தொடர்கிறது.
Link Source: https://bit.ly/3xcQ0qJ