பிரிஸ்பேன் நதிக்கரை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துணியால் சுற்றப்பட்டு இரும்புப் பெட்டி ஒன்றில் பெண் சடலம் வைக்கப்பட்டிருந்த குயின்ஸ்லாந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர். பெற்றோரால் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 30 வயதான சீன பெண் Qiong Yan-ன் சடலம் இது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில்தான் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதாக உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் Qiong Yan தனது தாயாரோடு சிலகாலம் தொடர்பில் இல்லாமல் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 26 வயதான Yang Zhao என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிட்னியின் ஊரக பகுதியான Mascot – ல் உள்ள அவரை குயின்ஸ்லாந்து போலீசார் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிட்னி போலீசாருக்கு கடிதம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் போலியாக தங்கியிருந்ததாக வாடகை செலுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்ன கொலை நடந்தது என்பது குறித்து தொடர்ந்து குயின்ஸ்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Link Source: https://ab.co/3rqSr7O