மெல்பர்னில் தென்கிழக்கு பகுதியில் ஐந்து இளைஞர்கள் வன்முறை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஃப்ராங்ஸ்டனின் தெற்கில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்குள்ள வீட்டுதலைவரிடம் car சாவியை கட்டாயப்படுத்தி கொள்ளையடித்தனர். அப்போது குடும்பத்தலைவி, தன்னையும், தன்குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள மேல்மாடியில் உள்ள அலமாரியில் ஒளிந்து கொண்டு Triple Zero (000)என்ற எண்ணிற்கு டயல் செய்தார்.
அந்த இளைஞர்கள் அந்த குடும்பத்தின் Jeep மற்றும் BMW ஐ Richmond வரை GPS tracking system கருவி இருந்ததை அறியாமலேயே ஓட்டிச் சென்றனர். இதனையடுத்து அவர்கள் வசமாக சிக்கி போலீசார் கைது செய்தனர்.
புதன்கிழமை நடந்த விசாரணையில், இந்த வீட்டு சம்பவம் தான் இறுதியானதாக நடந்தது என்று இளைஞர்கள் கூறினார். இந்த இளைஞர்கள் பல கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 15 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் நான்கு பேர் போலீஸ் காவலில் உள்ளனர். இவர்கள் குழந்தைகள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.