Breaking News

புத்தாண்டு இரவில் மாயமான சிறுவன் உயிரிழப்பு- நார்தன் டெரிட்டரி போலீஸ்..!!

boy killed on New Year's night - Northern Territory Police

புத்தாண்டு நாள் இரவில் வீட்டிலிருந்து மாயமான சிறுவன் உயிரிழந்தது தொடர்பான விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக நார்தன் டெரிட்டரி மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நார்தான் டெரிட்டரி மாகாணத்திலுள்ள ஹர்மண்ஸ்பர்க் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மாயமானான். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அவர்கள் எடுத்த நடவடிக்கையில் காணாமல் போன 10 மணிநேரத்தில், அடுத்த நாள் அதிகாலை ஹர்மண்ஸ்பர்க் பகுதிக்கு அருகிலேயே சிறுவன் மீட்கப்பட்டான். காயங்களுடன் காணப்பட்ட அவனை, காவலர்கள் மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர்.

boy killed on New Year's night - Northern Territory Police.ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நார்தன் டெரிட்டரி துணை ஆணையர் (பொறுப்ப்பு) சச்சின் சர்மா, புத்தாண்டு நாளில் இப்படியொரு நிலையில் ஊடகங்களிடம் பேசுவேன் என்று நினைக்கவில்லை. இறந்துபோன சிறுவனின் வயது 5 என கணிக்கப்படுகிறது. காவல்துறை இந்த வழக்கை முக்கியமாக கருதி விசாரணையை துவக்கியுள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையில் சிறுவன் மரணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நார்தன் டெரிட்டரி சுகாதாரத்துறை அமைச்சர் நடாஷா ஃபிளைஸ், மகனை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மிகவும் கொடுமையான சம்பவமாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதுதொடர்பாக அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3sQPujL