Breaking News

தேர்தலில் வெற்றி பெற்றால் சிட்னியில் இருந்து ஹன்டருக்கு அதிவிரைவு ரயில் சேவை : திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 500 மில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என லேபர் கட்சித் தலைவர் Anthony Albanese அறிவிப்பு

Labor leader Anthony Albanese has announced that $ 500 million will be allocated for the first phase of the project. high-speed train service from Sydney to Hunter if he wins the election.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிஸ்பேனில் இருந்து மெல்போர்ன் வழியாக சிட்னியை இணைக்கும் புதிய அதிவிரைவு ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக லேபர் கட்சி முன்வைத்துள்ளது.

அதிவிரைவு ரயில் திட்டத்தின் வாயிலாக, சிட்னியில் இருந்து நியூகேஸ்டல் செல்லும் பயண நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 45 நிமிடமாக குறையும் என்றும், மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 500 மில்லியன் டாலர் விடுவிக்கப்படும் என்றும் Anthony Albanese கூறியுள்ளார். இந்த நிதி நிலம் கையகப்படுத்துதல், திட்ட மேலாண்மை உள்ளிட்ட முதற்கட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Labor leader Anthony Albanese has announced that $ 500 million will be allocated for the first phase of the project. high-speed train service from Sydney to Hunter if he wins the election..உலகிலேயே அதிவிரைவு ரயில் திட்டத்தை செயல்படுத்தாத நாடாக ஆஸ்திரேலியா இருந்து வருவதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்களின் பிராந்தியமயமாக்கல் நிகழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் Anthony Albanese தெரிவித்துள்ளார். நியூகேஸ்டலில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய Anthony Albanese இது மிகவும் செலவு மிகுந்த திட்டம் என்றும் பேசியுள்ளார்.

அதே நேரத்தில் Anthony Albanese அறிவிக்கும் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்றும், ஆறு ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராக Anthony Albanese இருந்த போது இது போன்ற அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் Paul Fletcher கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தேச மதிப்பாக அவர் அறிவித்துள்ள அதி விரைவு ரயில் திட்டத்திற்கு 200ல் இருந்து 300 பில்லியன் டாலர் செலவாகும் என்றும், அதற்கான நிதியை பெறுவதற்கு கூடுதல் வரி விதிக் நேரிடும் என்றும் Paul Fletcher கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய ஸ்டண்ட் நடவடிக்கையை Anthony Albanese மேற்கொண்டு வருவதாகவும் Paul Fletcher குற்றம் சாட்டி உள்ளார். அதே நேரத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கான கவனத்தை காட்டிலும் வேறு எந்த திட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கக் தேவையில்லை என்றும் Paul Fletcher குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://bit.ly/3FSf2R3