முன்னாள் ராணுவ அதிகாரி பென் ஒரு போர் குற்றவாளி என்று நைன் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது. இதை தவறு என்று குறிப்பிட்டுள்ள பென், தற்போது செய்தி ஊடகத்தின் மீது அவதூறு வழக்கை முறையிட்டுள்ளது. ஆனால் பென் குறித்து வெளியான செய்தி அனைத்தும் உண்மை என்று நைன் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இறந்துபோன நாய், காயமடைந்த ஆஸ்திரேலிய சிப்பாய், “கூட்டு” மற்றும் “தவறான அறிக்கைகள்” போன்றவை புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் ராபர்ட்ஸ் ஸ்மித்துக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார் ஒருவர்.அவர் தன்னுடைய சாட்சியத்தில் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் மீதான குற்றத்துக்கு வேறொருவர் தான் காரணம். அதனால் பென் மீதான குற்றச்சாடு முழுவதும் பொய் என்று தெரிவித்துள்ளார். இதனால் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் வழக்கு புதிய திருப்புமுனையை அடைந்துள்ளது.