இவர்கள் அனைவரும் டும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் அடிலேய்டு பகுதியில் வசித்து வந்தனர். இந்தியாவின் ஹைதராபாத்தில் வசித்து வந்த பத்துலாவின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குக்கு செல்லும் போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் ஏபிசி ஊடகத்துக்கு பெட்டாகாமல்லாவின் குடும்ப நண்பர் விஜய் அக்கினேனி பேட்டி அளித்தார். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல்நிலை தேறி வருகிறது. இதுவரை அவர்களுடைய தாய் மற்றும் தந்தை விபத்தில் உயிரிழந்ததை சொல்லவில்லை என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவில் பெட்டாகாமல்லா குடும்பத்தினருக்கு யாரும் கிடையாது. அதனால் குழந்தைகளை பெட்டாகாமல்லா மற்றும் பத்துலாவின் பெற்றோர்கள் தான் கவனித்துக் கொண்டு வருகின்றனர். அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு தான் பெற்றோர் உயிரிழந்த விபரம் தெரிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.