மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆங் சாங் சூகி மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆங்சாங் சுகி அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றிய நிலையில் அங்கு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக ராணுவத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேநேரத்தில் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது அவர் ஆட்சியில் இருந்து தருணங்களில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த 57 வயதான பேராசிரியர் Sean Turns மியான்மர் Napypyidaw நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதே நேரத்தில் அவர் ஆங் சாங் சூகி விவகாரத்தில் மியான்மர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ஆத்திரேலிய தூதரகம் அவருக்கு தடை விதித்திருந்தது நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மியான்மர் தூதருடன் தாங்கள் பேச இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை நடைபெறும்போது பேராசிரியர் Turnell நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேறினர் மேலும் அவர் அரசின் உத்தரவுகளை மீறி நடந்து கொண்டதால் இது நியாயமான விசாரணையாக இருக்காது என்றும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மியான்மர் தூதரிடம் கன்பராவில் நடைபெற்ற சந்திப்பில் தாங்கள் விரிவாக தெரிவித்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் நடைபெறும் விசாரணையின்போது பேராசிரியர் Turnell ஆஜர் ஆகாமல் இருப்பதற்கான உரிய அறிவுரைகளை வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு மியான்மர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அரசு பேராசிரியர் Turnell -இடம் அவர் தன்னிச்சையாக இது போன்று செயல்படுவதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது மனிதத்தன்மையற்ற நடத்தப்படும் தாக்குதல் விவகாரங்களில் அடிப்படை உரிமையோடு தான் விசாரணையில் பங்கேற்கவும் பேராசிரியர் Turnell தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3EYZdrH