ஏதென்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் கிரீஸின் ஹிராகுலின் ஸ்டோரி பகுதியில் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர்.
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று முன் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலநடுக்க கண்காணிப்புத்துறை 1970க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களில் தங்கி உள்ளோர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. 1980களுக்குப் பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஹிராகுலின்சோரி பகுதியில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 10 பேருக்கு முதல்வர் சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து நகரிலுள்ள கட்டிடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தொடங்கியிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஒவ்வொரு தற்காலிக விடுதியிலும் சுமார் 300 பேர் தங்குவதற்கு வசதி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3CWKdch