இதையடுத்து வெஸ்டன் ஆஸ்திரேலியா மாகாணத்தின் தென் பகுதியில் 250 கி.மீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈகிள் பே மற்றும் பங்கர் பே போன்ற இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். அவர்கள் சாலை மார்க்கமாக ஊரை விட்டு வெளியேறுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அபாயத்தை உணர்ந்து தங்கும் இடத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க சுமார் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஈகிள் பே மற்றும் பங்கர் பேவை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல வெளியேற விரும்புபவர்களுக்கான மையங்களும் அருகே அருகே ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நிலைமை கையை மீறி போய்விட்டதாகவும், இப்போது மக்களை எச்சரிக்கை செய்வது என்பது கடைசி நேர முடிவு என்றும், தொடர்ந்து கடைசி நேர எச்சரிக்கை பணிகள் பயன் தராது என்று அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டு வருவதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link Source: https://ab.co/3zRA8Ny