விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77,554 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1828 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விக்டோரியா மாகாணத்தில் தொற்று பாதிப்பால் இதுவரை 75 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகானத்தில் இது வரை 38 லட்சம் பேருக்கும், நேற்று மட்டும் சுமார் 36,600 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தற்போது 16,400 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்டோரியாவில் அதிகளவுக்கு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தனிமைப்படுத்த படுவதை கருத்தில் கொண்டு புதிய திட்டமொன்றை ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படி இனி செவிலியர்கள் இருவருக்கு பதிலாக ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்திலும் ஒருவர் மட்டுமே பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வாகனத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீதான சுமையை குறைப்பதற்கும் தொற்று பாதிக்கப்படக்கூடிய எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருக்கும்.
Link Source: https://bit.ly/2YCg8Qo